குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி கால்நடை மருத்துவமனை சார்பில் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தில், சிறப்பு வெள்ள நிவாரண கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
சுமார் 100 மாடுகள், கன்றுகள், வெள்ளாடுகளுக்கு, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலட்டத்தன்மை நீக்கம் மற்றும் அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. குறிஞ்சிப்பாடி உதவி இயக்குனர் மோகன்குமார், முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் ரவீந்திரன், ராமமூர்த்தி, வேலாயுதம், கண்ணன் ஆகியோர் சிகிச்சையளித்தனர். அயன் குறிஞ்சிப்பாடி உழவர்மன்ற விவசாயிகள் தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE