காட்டுமன்னார்கோவில் : காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு மற்றும் காட்டுமன்னார்கோவில் விவசாயிகள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., பிரகாஷ், விவசாய சங்க நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சங்கர், செல்வக்குமார், முத்து ராமலிங்கம், செந்தில் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாடத்தில் கோவணத் துணியை கையில் ஏந்தி மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE