திருத்தணி: தொடர் மழையால், திருத்தணி ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிரை மூழ்கடித்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.'நிவர், புரெவி' புயலால், திருத்தணி ஒன்றியத்தில், தொடர்ந்து மழை பெய்ததால், ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிகின்றன.இதில், திருத்தணி அமிர்தாபுரம் ஏரி மற்றும் பெரிய ஏரி முழுதாக நிரம்பி, உபரி நீர் வெளியே செல்கிறது. இந்த தண்ணீர், பாலாஜி நகர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது. அதேபோல், அங்குள்ள, 30 ஏக்கர் வயல்களில் பயிரிடப்பட்ட நெற்பயிரையும், மூழ்கடித்துள்ளது.அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர், தண்ணீரில் மூழ்கியுள்ளதால், கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள், கடும் வேதனை அடைந்துஉள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'உபரி நீர் வயல்வெளியில் தேங்கி நிற்பதால், தண்ணீர் அகற்றும் வரை, நெற்பயிரை அறுவடை செய்ய இயலாது. அதனால், அரசு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE