மீஞ்சூர்: சட்டவிரோதமாக, துப்பாக்கியால் சுட்டு, மானை வேட்டையாடிய நால்வரை, கும்மிடிப்பூண்டி வனத்துறையினர் கைது செய்து, துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, கொரஞ்சூர், ரெட்டிப்பாளையம் கிராமத்தில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, காவலர் முகமது ஆசிக் மற்றும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியே வந்த, 'மகேந்திரா பொலீரோ' ஜீப் ஒன்றை மறித்தனர். அதில் இருந்த நால்வரிடம் விசாரித்ததில், முன் பின் முரணாக பதில் அளித்தனர்.ஜீப்பை சோதனையிட்டபோது, சில மணி நேரத்திற்கு முன், சுட்டு கொல்லப்பட்ட ஆண் மான் இறந்து கிடந்தது.இதையடுத்து, சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த நரசிம்மன், 54, விச்சூர் சேர்ந்த நாகராஜ், 35, மீஞ்சூர் பரணிதரன், 40, சோழவரம் தமிழ்ச்செல்வன், 42, ஆகியோரை, மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.மான் வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, 12 தோட்டாக்கள், ஜீப் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.தகவலறிந்து வந்த கும்மிடிப்பூண்டி வனத்துறையினர், நான்கு பேரையும் கைது செய்து, துப்பாக்கி, தோட்டாக்களை எடுத்துச் சென்றனர்.இறந்த மான், 2 வயதுக்குள் இருக்கும். கழுத்து பகுதியில், துப்பாக்கி குண்டு பாய்ந்து, மான் இறந்துள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE