வாலாஜாபாத்: சிங்காடிவாக்கம் - மருதம் இடையே, உயர்மட்ட பாலத்தின் இரு புறமும் தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.வாலாஜாபாத் அடுத்த, சிங்காடிவாக்கம் - மருதம் இடையே, தென்னேரி வரத்துக் கால்வாய் குறுக்கே, உயர்மட்ட பாலம் செல்கிறது.இதன் வழியாக, அத்திவாக்கம், மும்மல்பட்டு, திருமால்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், வாலாஜாபாத், தென்னேரி, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.இந்த பாலத்தின் இறக்கத்தில், இருபுறமும் தடுப்பு இல்லை. இதனால், இறக்கத்தில் கட்டுப்பாடின்றி செல்லும் வாகனங்கள், நிலை தடுமாறி விழும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, சிங்காடிவாக்கம் - மருதம் இடையே இருக்கும் பாலத்தில், இருபுறமும் தடுப்பு அமைக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE