வாலாஜாபாத்: மருதம் ஏரிக்கு செல்ல வேண்டிய தண்ணீர், ஏனாத்துார் - தென்னேரி சாலையில், பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வாலாஜாபாத் அடுத்த, மருதம் கிராமத்தில், பொதுப்பணித் துறை ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய், ஏனாத்துார் - தென்னேரி சாலை ஓரத்தில் செல்கிறது.இந்நிலையில், மருதம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தென்னேரி சாலையில், மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால், அச்சாலையில் செல்லும் மருதம், புத்தகம், ஓடந்தாங்கல் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, ஏனாத்துார் - தென்னேரி சாலை ஓரமாக இருக்கும், நீர்வரத்து கால்வாய் இருபுறமும் மண் கொட்டி, தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE