புவனகிரி : புவனகிரி அருகே விஷப் பூச்சி கடித்ததில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புவனகிரி கள்ளிக்காட்டு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். கூலி தொழிலாளி. இவர் மனைவி பிரியா, 30; நேற்று முன் தினம் அதிகாலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அப்போது விஷப் பூச்சி கடித்து மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE