சங்கராபுரம்: சீரமைக்கப்பட்ட சங்கராபுரம் ஏரிக்கரை, மீண்டும் உடைந்ததால், பல தரப்பினர் இடையே, கலக்கத்தை ஏற்படுத்தியது.வாலாஜாபாத் அடுத்த, சங்கராபுரம் கிராமத்தில், ஏரி உள்ளது. இந்த ஏரி மதகில், லேசாக ஓட்டை ஏற்பட்டு, கரை உடைந்தது. ஏரியில் இருந்த தண்ணீர், வீணாக வயலுக்கு சென்றதால், விவசாயிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகம் சேர்ந்து, சேதமடைந்த ஏரிக்கரையை சீரமைத்தது.இந்நிலையில், மண் கொட்டி பலப்படுத்திய கரைப்பகுதியில், நேற்று காலை, மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வயலுக்கு சென்றது. கிராம மக்களே, ஏரி உடைப்பை, மீண்டும் சீரமைத்தனர்.ஏரிக்கரை சீரமைப்பு பணிகளை, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி நிர்வாகம் முறையாக மேற்கொள்ளாததாலேயே, மீண்டும் உடைப்பு ஏற்பட்டது என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE