வாலாஜாபாத்: நியாயவிலை கடைகளில் வினியோகம் செய்யப்படும், 1 கிலோ கொண்டைக் கடலையில், 100 கிராம் கற்கள் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக, 450க்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் உள்ளன.இந்த கடைகளில், இம்மாதம், ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு, 5 கிலோ மூக்கடலை எனும் கொண்டை கடலை, இலவசமாக வினியோகிக்கப்படுகிறது. இதில், 100 கிராம் அளவில், கற்கள் கிடப்பதாக, புகார் எழுந்துள்ளது.இது குறித்து, வாலாஜாபாத் வட்டாரத்தைச்சேர்ந்த குடும்ப அட்டைதாரர் ஒருவர் கூறியதாவது: ஒரு அட்டைக்கு, 1 கிலோ துவரம் பருப்பு, குறைந்த விலைக்கு வழங்கி வந்தனர். இந்த மாதம், கொண்டை கடலை, இலவசமாக வினியோகம் செய்வதால், துவரம் பருப்பை நிறுத்திவிட்டனர்.அதிலும், கற்கள் கலந்த கொண்டை கடலையில், கற்களை நீக்கும்போது, 1 கிலோ கடலைக்கு, 100 கிராம் எடை குறைகிறது.இது குறித்து கேட்டால், எங்களுக்கு வருவதை அப்படியே வினியோகம் செய்கிறோம். வேண்டுமானால், மேல் அதிகாரிகளிடம் பேசிக் கொள்ளுங்கள் என்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE