சென்னை:சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 228 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 70 ஆயிரத்து, 436 மாதிரிகள் பரிசோதனையில், 1,235 பேருக்கு தொற்று உறுதியானது.
அதிகபட்சமாக, சென்னையில், 307; கோவையில், 115 பேர் பாதிக்கப்பட்டனர். மற்ற மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையில் தொற்று உள்ள நிலையில், 10 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதிவாகி உள்ளது.
சிகிச்சை பெறுபவர்களில், 1,311 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து, ஏழு லட்சத்து, 74 ஆயிரத்து, 306 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.தற்போது, 10 ஆயிரத்து, 299 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்றால் நேற்று, 17 பேர் உட்பட, இதுவரை, 11 ஆயிரத்து, 870 பேர் இறந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE