சிவகங்கை:சிவகங்கையில் நடந்த மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தலில், குலுக்கல் முறையில், இரு பதவிகளையும், அ.தி.மு.க., கைப்பற்றியது.
சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் உள்ள, 16 வார்டு தேர்தலில், அ.தி.மு.க., -- 8, தி.மு.க.,- - 6, காங்., - -2 என, சம அளவில் வெற்றி பெற்றது. இதனால், தலைவர், துணை தலைவர் தேர்தல், நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டு, நடந்தது.கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில், கவுன்சிலர் பொன். மணிபாஸ்கரன், தி.மு.க., சார்பில், கவுன்சிலர் செந்தில்குமார் போட்டியிட்டனர்.
துணை தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில், சரஸ்வதி, தி.மு.க., அணி சார்பில், காங்., கவுன்சிலர் சுந்தரராஜன் போட்டியிட்டனர். இதில், கவுன்சிலர்கள் சம அளவில் ஓட்டளித்தனர். இதனால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டதில், அ.தி.மு.க.,வே தலைவர், துணை தலைவர் பதவியை கைப்பற்றியது. கலெக்டர் முன்னிலையில், இருவரும் பதவி ஏற்றனர். இரு பதவிகளிலும் தோல்வியை தழுவியதால், தி.மு.க., வேட்பாளர் உட்பட அக்கட்சி கவுன்சிலர்கள் அழுதபடியே சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE