கோவை:ஈமு கோழி திட்டத்தில், 2.40 கோடி ரூபாய் மோசடி செய்த இருவருக்கு, தலா, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பொல்லிகள் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம், 48; உறவினர் கண்ணுசாமி, 45. இவர்கள் இருவரும், 2011ம் ஆண்டு, பட்டக்காரன்பாளையத்தில், 'ஆர்.கே., ஈமு பார்ம்ஸ்' எனும் நிறுவனத்தை துவங்கினர்.
இதில், 110 பேர், 2.4 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். முதலீட்டாளர்களுக்கு உரிய முதிர்வு தொகை தரப்படாததால், வழக்குப் பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மோகனசுந்தரம், கண்ணுசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.கடந்த, 2014ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
வழக்கு, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ரவி, இருவருக்கும் தலா, 10 ஆண்டுகள் சிறை மற்றும், 1.21 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். அபராதத் தொகையில், 1.2 கோடி ரூபாயை, முதலீட்டாளர்களுக்கு வழங்க உத்தரவிட்டார். குற்றவாளிகள் ஆஜராகாததால், இருவரையும் கைது செய்ய, பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE