சேலம்:சேலத்தில், பச்சிளம் பெண் குழந்தையை, 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவத்தில், இரு பெண்களை, போலீசார் கைது செய்தனர்.குழந்தையின் தந்தை உட்பட மூன்று பேரை தேடுகின்றனர்.
சேலம், நெத்திமேடு கரடு தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் விஜய், 32; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா, 25. இவர்களுக்கு, இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.நவ., 1ல், சத்யாவுக்கு, மேச்சேரி அரசு மருத்துவமனையில், மூன்றாவதாக, பெண் குழந்தை பிறந்தது. அதிர்ச்சி அடைந்த விஜய், குழந்தையை, அவரது வீடு அருகே உள்ள வெங்கடேசன் மனைவி கோமதி, 34, என்பவரிடம், நவ., 15ல், 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டார்.
குழந்தையை காணாமல் துடித்த சத்யா, நவ., 17ல் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார், கோமதியை பிடித்து விசாரித்தனர். இதில், ஈரோடு, சூரம்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் மனைவி நிஷா, 40, என்பவரிடம் விற்றது தெரிந்தது.அவரை பிடித்து விசாரித்ததில், பவானியைச் சேர்ந்த சித்ரா, 35, பாலாமணி, 38, ஆகியோர் மூலம், குழந்தை, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் சென்றது தெரிந்தது. குழந்தையை மீட்க, தனிப்படை போலீசார், ஐதராபாத் சென்றுஉள்ளனர்.நேற்று முன்தினம், நிஷா, கோமதியை கைது செய்த போலீசார், தலைமறைவான விஜய், சித்ரா, பாலாமணியை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE