உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி இடையே ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.
மதுரை- - போடி அகலரயில்பாதை பணிகள் தற்போது ஆண்டிபட்டி வரை நிறைவு பெற்றுள்ளது. உசிலம்பட்டி வரை கடந்த ஜனவரியில் சோதனை ஓட்டம் நடந்தது. தற்போது உசிலம்பட்டி - ஆண்டிபட்டி வரையிலான பணி நிறைவு பெற்றுள்ளது. டிச.,16ல் தென்னக ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர்.முன்னதாக நேற்று மதியம் 3:00 மணிக்கு உசிலம்பட்டி - ஆண்டிபட்டி வரை 21 கி.மீ., துாரத்திற்கு ரயில் இன்ஜின் மட்டும் ஓட்டி சோதனை மேற்கொண்டனர்.
உசிலம்பட்டியில் இருந்து அதிகபட்சமாக 50 கி.மீ., வேகத்தில் ஓட்டி 25 நிமிடங்களில் ஆண்டிபட்டிக்கு சென்றனர். ஆண்டிபட்டியில் இருந்து திரும்பும் போது அதிகபட்சமாக 90 கி.மீ., வேகத்தில் 17 நிமிடங்களில் உசிலம்பட்டி வந்தனர். டிச.,16ல் அதிகாரிகள் ஆய்வுக்கு பின் மதுரை - ஆண்டிபட்டி வரை பயணிகள் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE