பந்தலுார்:வயநாடு அருகே, கல்குவாரியில் லாரி மீது பாறை விழுந்ததில் டிரைவர் பலியானார்.
கேரளா மாநிலம், வயநாடு பகுதியில் உள்ள மேப்பாடி கடைச்சிக்குன்னு பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை கற்களை ஏற்றும் வகையில் டிப்பர் லாரி நிறுத்தப் பட்டு இருந்தது. அப்போது, மேல்பகுதியில் இருந்த பெரிய பாறை உருண்டு வந்து, டிப்பர் லாரி மீது விழுந்தது.
அதில், லாரி டிரைவர் மானந்தவாடியை சேர்ந்த செல்வன்,38, என்பவர் சிக்கிக் கொண்டார். தீயணைப்பு துறையினர் பாறையை அகற்றி, லாரிக்குள் சிக்கிய டிரைவர் செல்வனை மீட்டனர்.மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில் செல்வன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE