மதுரை:மத்திய வேளாண் திருத்த சட்டங்கள் குறித்து தி.மு.க.,வின் பொய் பிரசாரம்
விவசாயிகளிடம் எடுபடவில்லை என மதுரையில் பா.ஜ., பிரசாரம் மற்றும் வெளியீடு பிரிவு மாநில செயலாளர் ராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: விவசாயிகளின் விளைபொருட்களை விற்க, சந்தைப்படுத்த, பதப்படுத்த, ஏற்றுமதி செய்ய மத்திய வேளாண் திருத்த சட்டங்கள் வழிவகை செய்கின்றன. இதை
விவசாயிகளின் பிரதிநிதி ரங்கநாதன் போன்றவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.மேலும்
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.ஆறாயிரம், சொட்டுநீர்பாசனத்திற்கு நுாறு சதவீத மானியம் என பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
காங்., போன்றஎதிர்கட்சிகளின் துாண்டுதலின்படி டில்லியில் விவசாயிகளின் போராட்டம்
நடக்கிறது.அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் என்ற பெயரில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் செய்த பொய் பிரசாரம் விவசாயிகளிடம் எடுபடவில்லை. உண்மையான விவசாயிகள் யாரும் இச்சட்டங்களை எதிர்த்து போராடவில்லை.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருவதால் விவசாயிகளிடம் மத்திய அரசு மீதான நல்லெண்ணத்தை சீர்குலைக்கவே தி.மு.க.,உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெயருக்கு போராட்டம் நடத்துகின்றனர், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE