திருமங்கலம் : இயற்கை பேரிடர்களால் தோட்டக்கலை பயிர்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளில் இருந்து தற்காத்து கொள்ள பயிர்காப்பீடு செய்யுமாறு விவசாயிகளை தோட்டக்கலைத்துறை வலியுறுத்தி உள்ளது.
திருமங்கலம், கள்ளிக்குடி பகுதியில் தோட்டக்கலை பயிர்களான வாழை, தக்காளி, வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அடங்கல், பட்டா, வங்கி பாஸ்புக், ஆதார் அட்டையுடன் தொடக்க வேளாண் வங்கிகள், அரசு மற்றும் பொது இசேவை மையங்களில் வாழை ஏக்கருக்கு ரூ. 3058, வெங்காயம் ரூ. 1816, மிளகாய் ரூ. 1086, தக்காளி ரூ.1013 பிரீமியம் தொகை செலுத்தி விண்ணப்பிக்கலாம் என உதவி தோட்டக்கலை இயக்குனர்கள் பிரபா, தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE