ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் வட்ட சட்டப்பணிகள், திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் மனித உரிமைகள் தினம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சட்டப்பணிகள் குழுத் தலைவர் அன்னலட்சுமி தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் ரூபபாலன், திட்ட மேலாளர் ஆட்லின்ெஹலன், ஊராட்சித் தலைவி அமுதா முன்னிலை வகித்தனர்.மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி ராஜசெல்வன், வழக்கறிஞர் சின்னகருப்பன் மனித உரிமைகள், தொழிலாளர் சட்டங்கள் குறித்து பேசினர். களப்பணியாளர்கள் மகேஸ்வரி, கிருத்திகா, ஜெனிபர் பிரியங்கா, தரண்யா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE