திண்டுக்கல் : திண்டுக்கல் போலீஸ் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் காலையில் ஒரு போன் கால் வந்தது. அதில் ஏதோ ஒன்றை கடத்திவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடத்தியது 'வெள்ளை நிற கார்' என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு, ஆங்காங்கே தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனை சாவடிகளில் வெள்ளை நிற கார்களை மட்டும் சோதனையிட்டனர். இறுதியில் போலீசாருக்கு வந்த அழைப்பில் கூறப்பட்டபடி கடத்தல் சம்பந்தமானது எதுவும் வரவில்லை. போலீசை அலைக்கழிக்க வந்த போன் கால் என தெரிந்தது.இதேபோன்று ஏற்கனவே அபிராமி அம்மன் கோயில் மற்றும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE