திண்டுக்கல் : பொங்கலுக்கு வினியோகம் செய்வதற்காக அரசின் விலையில்லா வேட்டி, சேலை திண்டுக்கல் வந்திறங்கியது.
ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு வழங்குவதற்காக தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு வேட்டி, சேலைகள் நேற்று கிழக்கு தாசில்தார் அலுவலகம் வந்திறங்கியது. அதிகாரிகளிடம் கேட்டபோது, ''திண்டுக்கல்லில் 6 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். தற்போது வந்தவற்றை அந்தந்த தாலுகாவிற்கு பிரித்தனுப்பி, பொங்கல் பரிசோடு வழங்கப்படும்'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE