அவிநாசி:அவிநாசியில், அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடப்பது, மக்கள் மத்தியில் அச்சமடைய செய்துள்ளது.அவிநாசியில், சில மாதங்களுக்கு முன், அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடந்தது. பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கைவரிசை காண்பித்த நபர்களை போலீசார் கைது செய்தபின், இந்த குற்ற சம்பவம் கட்டுக்குள் வந்தது. தற்போது, மீண்டும் திருட்டு நடப்பது, அதிகரித்து இருக்கிறது.அவிநாசி, ரங்காநகர் - வைஷ்ணவி கார்டன் பகுதியில் வசிக்கும் ஜெயராஜ் என்பவர், இருநாளுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு, சொந்த ஊருக்கு சென்றார். நேற்று காலை, வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, ஐந்து சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.புகாரின் பேரில், அவிநாசி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், அவிநாசி - கைகாட்டிபுதுார் ரோட்டோரம், செடியில் பூப்பறித்து கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து, மர்ம நபர்கள் சிலர், செயின் பறித்து சென்றனர்.இத்தகைய திருட்டில் ஈடுபடும் நபர்கள், டூவீலரில் வந்து கைவரிசை காண்பித்து செல்கின்றனர் என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இவ்வாறு, தொடர்ச்சியாக திருட்டு நடந்து வருவது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE