திருப்பூர்:தென்னம்பாளையம் மீன்மார்க்கெட் அருகே, சில்லறை விற்பனை செய்வதை தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர், தென்னம்பாளையம் பகுதியில், மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மீன்கள் தினமும் விற்பனை செய்யப்படுகின்றன. சில்லரை வியாபாரிகளும் இங்கு மீன் வாங்கி, நகரப்பகுதியில் விற்பனைசெய்கின்றனர்.மொத்த வியாபாரம் செய்யும், பெரிய வியாபாரிகள், மொத்த விலைக்கே சில்லறை வியாபாரமும் செய்கின்றனர். இதனால், சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல்காதர் தலைமையிலான வியாபாரிகள், கலெக்டர் அலுவலகத்தில் இதுகுறித்து நேற்று முறையிட்டனர்.சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'மீன் மார்க்கெட் அருகே, சில்லறை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். மொத்த வியாபாரம் நடக்கும் பகுதியில், சில்லறை வியாபாரம் செய்வதை தடை செய்ய வேண்டும்,' என்றனர்.இலவச ஆம்புலன்ஸ்திருப்பூர் மக்களின் பயன்பாட்டுக்காக, திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் இயக்க திட்டமிட்டுள்ளனர். துவக்க விழாவில் கலெக்டர் பங்கேற்று, ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE