பல்லடம்:கறிக்கோழி கூலி உயர்வு பிரச்னைக்கு, அமைச்சர் முன்னிலையில் நடந்த கூட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது.திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கறிக்கோழி உற்பத்தி தொழில் நடந்து வருகிறது. கூலி அடிப்படையில் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் வளர்க்கும் கோழிகள் விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகின்றன.இதற்கான வளர்ப்பு கூலியை பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. கூலி உயர்வு கேட்டு, கறிக்கோழி பண்ணையாளர்கள், பல கட்ட பேச்சு நடத்தினர். இறுதியாக கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடந்த பேச்சில், கூலி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.பி.சி.சி., அறிக்கை:கறிக்கோழி பண்ணையாளர்களுக்கான வளர்ப்பு கூலி, 6.50 ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கூலி உயர்வு நவ., 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. டிச.,15 முதல் கர்நாடக மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது போல், கோழிகளை பிடிக்கும்போது விற்பனைக்கு எடுத்து செல்லப்படும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE