வெள்ளகோவில்:வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில், சமூக இடைவெளி பின்பற்றாமல், முக கவசம் அணியாமல் கடைவீதி பகுதியில் உலா வருகின்றனர்.இதனால், சுகாதார துறை ஆய்வாளர்கள், கதிரவன், வேல்முருகன், நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கடைவீதி, முத்தூர் ரோடு, புதிய பஸ்டாண்ட் பகுதிகளில் நடந்தும், இரு சக்கர வாகனங்களில் வருவோருக்கு, சுகாதார துறை சார்பாக முககவசம் வழங்கியும், அபராதம் விதிக்கப்பட்டது. அவ்வகையில், நேற்று 21 நபர்களிடம், 4,500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement