ஆனைமலை:கோட்டூர், ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி,. பள்ளி மாணவர்களுக்கு, சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினம் குறித்து, ஆன்லைனில் ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன.பல நாடுகளிலும் ஆண்டுதோறும் டிச., 14ம் தேதி சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினமாக கடந்த, 1991ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. ஆற்றலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், ஆற்றலை வீணாக்கக்கூடாது என்பன உள்ளிட்ட, ஆற்றல் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நேற்று, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியில், சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினம் குறித்த, 'ஆன்லைன்' விழிப்புணர்வு ஓவியம், கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே, அழகாக ஓவியங்கள் வரைந்து, கட்டுரை, கவிதைகள் எழுதி, 'வாட்ஸ்ஆப்' வாயிலாக ஆசிரியர்களுக்கு அனுப்பினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE