பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவர்களும், அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும்; நவீன ஆங்கில மருத்துவ முறையையும், இந்திய மருத்துவ முறைகளையும் இணைத்து, ஒருங்கிணைந்த மருத்துவ முறையை உருவாக்கும் மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து, பொள்ளாச்சி கிளை இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள பொது வேலை நிறுத்தம் நடந்தது. காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை வெளிநோயாளிகள் பிரிவு செயல்படாது என அறிவிக்கப்பட்டது. அவசர சிகிச்சைகள் மட்டும் பார்க்கப்பட்டது.பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்கள், இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 35க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், இது தவிர, கிளினிக்களும் உள்ளன. மொத்தம், 350 தனியார் டாக்டர்கள், கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE