அன்னுார்:அன்னுார் தாலுகாவில், கடந்த மூன்று நாட்களில், 117 பேர் சர்க்கரை ரேஷன் கார்டிலிருந்து அரிசி கார்டாக மாற்றம் செய்துள்ளனர்.சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள் விரும்பினால், தங்கள் கார்டை, அரிசி கார்டாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அன்னுார் தாலுகாவில், 799 பேர் சர்க்கரை ரேஷன் கார்டுகள் வைத்துள்ளனர். இதில், கடந்த மூன்று நாட்களில், 117 பேர் அரிசி கார்டாக மாற்ற விண்ணப்பித்து, பெற்றுக் கொண்டனர். 'சர்க்கரை கார்டுதாரர்கள் விரும்பினால் வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பித்து மாற்றிக் கொள்ளலாம்' என, வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE