பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில், தமிழக அரசின் இரு பெண்குழந்தைகள் உதவித் தொகை திட்டத்தில், பயனாளிகளுக்கு வருங்கால வைப்பு நிதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பெண்கள் பாதுகாப்பு திட்டம், பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல், குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, வன்கொடுமைக்கான சட்டப்பூர்வ உரிமைகள், குழந்தை திருமணங்களை தவிர்த்தல், சட்டம் மற்றும் காவல்துறை உதவி, உளவியல் ஆலோசனைகள் குறித்து, ஒருங்கிணைந்த சேவை மைய முதுநிலை ஆலோசகர் ஷெரீன் விளக்கினார். சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கலைமணி திட்டத்தின் பயன்குறித்து பேசினார். கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, குருடம்பாளையம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, 11 பயனாளிகளுக்கு, வருங்கால வைப்பு நிதிப்பத்திரங்கள் வழங்கினார்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவர் நர்மதா துரைசாமி தலைமை வகித்தார். ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் அனிதா, ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் ருக்மணி கிருஷ்ணமூர்த்தி உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE