கோத்தகிரி,:கோத்தகிரி தீனட்டி கிராமத்தில், வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை; மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு என்ற 'அட்மா' திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான விவசாயிகள் அழைத்து செல்லப்பட்ட, 'கண்டுணர்வு' சுற்றுலா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.அதில், பாதுகாக்கப்பட்ட சூழலில் செல்லரி, குடை மிளகாய், தக்காளி, முட்டைகோஸ் மற்றும் கொய்மலரான கார்னேஷன் சாகுபடி குறித்தும், விவசாயிகளுக்கு நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு கோத்தகிரி வேளாண் துறை அலுவலர்கள், விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில், தீனட்டி மற்றும் மசக்கல் சுற்றுவட்டார விவசாயிகள் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE