பந்தலுார்:பந்தலுார் அருகே, கொளப்பள்ளி பகுதியில், 110 கே.வி. துணைமின் நிலையம் அமைக்க வலியுறுத்தும் வகையில், மக்கள் நல அமைப்பின் நடவடிக்கை குழு சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது.மெல்வின் வரவேற்றார். ராமநாதன் தலைமை வகித்தார். அதில்,'பந்தலுார் கொளப்பள்ளியில், 110 கே.வி., துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்; கூடலுார், பந்தலுாரில் மின் இணைப்பு வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்; கோரிக்கையை வலியுறுத்தி, ஜன., மாதம், 4,5 ம் தேதிகளில் பிரதமர் மற்றும் முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஒரு லட்சம் 'ஈ-மெயில்' அனுப்ப அனைவரும் முன் வரவேண்டும்,' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், நிர்வாகிகள் வாசு, சுல்பிகர் அலி, சபாது, வேலாயுதம், முகமது அலி, சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் லில்லிஏலியாஸ் உள்ளிட்ட பலர் பேசினர். ஷைலா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE