பந்தலுார்:'பந்தலுார் அருகே அத்திச்சால் பகுதியில் வருவாய் துறை நிலம் ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.அத்திச்சால் கிராமத்தை ஒட்டி பாதிரிமூலா அமைந்துள்ளது. இப்பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. வனமாக காணப்படும் இப்பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடிசைகள் கட்டி, விவசாயம் செய்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய் துறை ஊழியர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனுவில்,' இப்பகுதியில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு தொடரும் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE