கோபி: வேட்டைக்காரசாமி கோவில் உண்டியலில், 36 ஆயிரம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். கோபி அருகே வேட்டைக்காரன்புதூரில், பிரசித்தி பெற்ற வேட்டைக்காரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்த, இரு உண்டியல் உள்ளது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை, அறநிலையத்துறையினர் உண்டியலை திறந்து, காணிக்கை எண்ணுகின்றனர். கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில், நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில், 36 ஆயிரத்து, 941 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. கடந்த நவ.,6ல் உண்டியல் திறந்தபோது, 67 ஆயிரம் ரூபாய் காணிக்கை கிடைத்ததாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE