சேலம்: சேலம் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில், ஆண், பெண் தலா, 5 பேர் குணமாகி, நேற்று, வீடு திரும்பினர். புதிதாக, சேலத்தில் ஒரேநாளில், 73 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 31 பேர், மகுடஞ்சாவடி, 8, ஆத்தூர் ஒன்றியம், 6, நங்கவள்ளி, 5, ஓமலூர், தாரமங்கலம், தலா, 3, பெத்தநாயக்கன்பாளையம், இடைப்பாடி நகராட்சி, மேட்டூர் நகராட்சி, தலா, 2, இடைப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், மேச்சேரி, சங்ககிரி, வீரபாண்டி, கெங்கவல்லி, பி.என்.பட்டி, வாழப்பாடி, தலா ஒருவர் வீதம், மாவட்டத்தில், 71 பேர், ஈரோடு, ஒசூர், தலா ஒருவர் என, சேலத்தில், 73 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுடன் சேர்த்து, இதுவரை, 30 ஆயிரத்து, 675 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இறந்தவர்கள், 447 பேர் அடங்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE