சேலம்: சேலம், திருச்சி பிரதான சாலை, குகையில், மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலக திறப்பு விழா நடந்தது. அக்கட்சி அமைப்பு செயலர், சேலம் புறநகர், மாநகர் மாவட்ட மண்டல பொறுப்பாளர் பொன்னையன் திறந்து வைத்து, அலுவலகத்தை பார்வையிட்டார். பின், அவர் பேசுகையில், ''தகவல் தொழில்நுட்ப பிரிவினர், தமிழக அரசின் சாதனைகளை சொல்லி, பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும்,'' என அறிவுறுத்தினார். இதில், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் ராஜ்சத்யன், மாநகர் மாவட்ட செயலர், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடாசலம், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சக்திவேல், முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம், மாநகர பொருளாளர் வெங்கடாஜலம், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் கனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் மேயர், முன்னாள் துணைமேயர், பகுதி செயலர்கள், வார்டு செயலர்கள், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE