ஓசூர்: மத்திகிரி அரசு பள்ளியில், ரூ.2.50 கோடி மதிப்பில், புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் இதர கட்டுமான பணிகள், பூமிபூஜை செய்து துவங்கப்பட்டன. ஓசூர் அருகே, மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நபார்டு திட்டத்தில் புதிய வகுப்பறை கட்டடங்கள், ஒரு ஆய்வுக்கூடம், இரு நவீன கழிப்பறைகள் மற்றும் ஆழ்துளை கிணறு என, மொத்தம் இரண்டு கோடியே, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பணிகளை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வாசுதேவன், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியை கவிதா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெசிந்தா பவளமல்லி, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கிருஷ்ணன், சாக்கப்பா உட்பட பலர் பங்கேற்றனர். தனியார் நிறுவனம் மூலம், கட்டி முடிக்கப்பட்டுள்ள, நான்கு வகுப்பறைகள் விரைவில் திறக்கப்படவுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE