கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பி.டி.ஓ., அலுவலகத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்காக சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய குழுத் தலைவர் அம்சாராஜன் தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் சரவணபவா, உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., பயாஸ் அகமத் தீர்மானத்தை வாசித்தார். கூட்டத்தில், இந்தியாவிலேயே சிறப்பாக ஆட்சி செய்யப்படும் மாநிலங்களின் பட்டியலில், தமிழக அரசு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதால், முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, டோல்கேட் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால், வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு சார்பில் மாங்கனி அரவை தொழிற்சாலை, காய்கறி பதப்படுத்தும் தொழிற்சாலையை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE