வாணியம்பாடி: குடிப்பதற்காக, சொந்த பேரனையே கொலை செய்ய முயன்ற தாத்தா உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன், 45. இவர் மனைவி சித்ரா, 40. இவர்களது மகன் சதீஷ், 11, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் கணேசனும், சித்ராவும் கூலி வேலைக்கு சென்று விட்டனர். இதனால் சதீஷ் வீட்டில் இருந்தார். அப்போது அவரது தாத்தா வேலு, 61, அவர் நண்பர் பாலன், 62, ஆகியோர் சதீஷிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் இல்லை என, கூறியுள்ளார். இதையடுத்து, சதீ ?ஷ அவர்கள் பைக்கில், ஏற்றிக் கொண்டு, நியூடவுன் மைதானம் வந்தனர். அங்கு அவரை அடித்து உதைத்து, அவர் அணிந்திருந்த, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி அரை ஞான் கயிற்றை அறுத்து எடுத்துக் கொண்டனர். இதில், சதீஷ் மயக்கம் போட்டு விழுந்தார். பின்னர், வாணியம்பாடியில் உள்ள ஒரு நகை கடையில் அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தில் இருவரும் மது குடித்தனர். மாலை, 6:00 மணிக்கு வீட்டுக்கு வந்த போது மகனை காணாததால், அவர் தாய் சித்ரா வாணியம்பாடி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் இரவு, 10:00 மணிக்கு ரோந்து சென்றனர். மைதானத்தில் மயக்க நிலையில் இருந்த சதீ?ஷ மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, தாத்தா வேலு, அவர் நண்பர் பாலன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE