பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை, நீர்வரத்து வினாடிக்கு, 8,000 கன அடியாக நீடித்து வந்து கொண்டிருந்தது. கர்நாடக - தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக, மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர் ஆணைய கணக்கீடு படி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 8,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 8,000 கன அடியாக நீடித்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால், சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்து அருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE