கிருஷ்ணகிரி: கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட, முன்னாள் ராணுவ வீரரின் மனைவி குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி அருகே ராமாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன், 50; முன்னாள் ராணுவ வீரர். இவர் மனைவி நாகலட்சுமி, 45; இவர்களுக்கு பிரதீப், 25; என்ற மகன் உள்ளார். இவர் பி.இ., படித்து விட்டு வீட்டில் இருக்கிறார். தற்போது நாராயணன், செங்கல்பட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். நாகலட்சுமியும், அவர் மகனும் கீழ் வீட்டில் குடியிருக்கின்றனர். மாடியில் உள்ள இரண்டு வீடுகளில், ஒன்றை வாடகைக்கு விட்டுள்ளனர். மற்றொரு வீடு காலியாக உள்ளது. இந்நிலையில், நேற்று காலை, நாகலட்சுமி காலியாக உள்ள வீட்டில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து, எஸ்.பி., பண்டிகங்காதர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வீட்டின் கீழ்தளத்தில் குடியிருந்து வரும் நாகலட்சுமி, எதற்காக மாடியில் உள்ள வீட்டிற்கு சென்றார். அவரை கொலை செய்தது யார் என, குருபரப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஐந்து நாட்களில் இரண்டு ஆண்கள், ஒரு பெண் என, மூன்று கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE