மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு முன் நேற்று வழக்கறிஞர் நீலமேகம் ஆஜராகி முறையிட்டதாவது:ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளை மேம்படுத்தும் நல்ல நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிராக தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் அத்தியாவசிய மருத்துவப் பணி பாதிக்கப்படும். நோயாளிகள் சிரமப்படுவர். தனியார் மருத்துவமனைகளின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.நீதிபதிகள்,'மனு செய்யும்பட்சத்தில் பரிசீலிக்கப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE