கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கரூர் மாவட்டத்தில், கடந்த நவம்பர் மாதம் முதல், கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில், 4,957 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டு, 4,791 பேர் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது, மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்கள் அனைவரும், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை, 48 பேர் கொரோனா வைரஸ் தொற்றால், உயிரிழந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE