குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலையில், மேற்கு ஒன்றிய, வி.சி., கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கூடலூர் பஞ்., பொம்மாநாயக்கன்பட்டியில் உள்ள, அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் பள்ளி கட்டடம் கட்டுவதற்கு, அரசு பரிந்துரைப்படி வழங்கப்பட்டுள்ள இடத்தில், கட்டடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் பாரபட்சம் காட்டி வருவதாகவும், அதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டிப்பதாகவும், உடனடியாக அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வலியுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE