கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, கம்மநல்லூர் பஞ்., பொய்கைப்புத்தூர் கிராமத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில், வீடுகளில் சென்று கழிவுநீர் தேக்கம், குப்பை தேக்கம், பிளாஸ்டிக் கழிவு தேக்கம், ஆகியவை அகற்றப்பட்டது. மக்களுக்கு சுற்றுப்புறத் தூய்மை மூலம், கொசு உற்பத்தி தடுப்பதற்கான வழிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கழிவு நீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. நல்ல குடிநீர் பாதுகாப்பு பற்றி எடுத்துக் கூறப்பட்டது. பணிகளில், மஸ்தூர் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE