குளித்தலை: ஈரோட்டைச் சேர்ந்தவர் முருகன் மனைவி காயத்ரி. இவர், கடந்த செப்., 4ல், ஸ்கூட்டரில் தன் தாயாருடன், திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகே உள்ள பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். லாலாபேட்டை மேம்பாலத்தில், பின்னால் பைக்கில் வந்த, திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த வடிவேல், 25, தஞ்சாவூரை சேர்ந்த அருண்குமார், 23, ஆகியோர், காயத்ரி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். லாலாப்பேட்டை போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில், குளித்தலை குற்றவியல் மாஜிஸ்திரேட் எண்- 1 நீதிபதி தினேஷ் குமார், தீர்ப்பு அளித்தார். இதில், அருண்குமார், வடிவேலுக்கு தலா, மூன்றாண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால், மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், தீர்ப்பளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE