வெண்ணந்தூர்: ராமகிருஷ்ணாமிஷன் அனைத்து வித்யாலயா பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், கோவிலை தூய்மை செய்யும் பணி நடக்கிறது. கோவை ராமகிருஷ்ணா மிஷனில் படித்த, நாமக்கல்லை சேர்ந்த அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் இணைந்து வாரந்தோறும், கோவில்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம், நாமக்கல் நகரில் சில கோவில்களை சுத்தப்படுத்தினர். இன்று, வெண்ணந்தூர் அலவாய்மலை முருகன் கோவில் மற்றும் ஆட்டையாம்பட்டி சாலையில் உள்ள, சித்தர் கோவில்களை தூய்மை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஏற்பாடுகளை, மாணவர் சங்க செயலாளர் உதயகுமார், இணைச்செயலாளர் அருணாசலம், பொருளாளர் தில்லை சிவக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர். கோவிலை தூய்மை செய்யும் பணியில் கலந்துகொள்ளுமாறு, மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE