உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 58; இவருக்கு நேற்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். எலவனாசூர்கோட்டை அடுத்த செம்பியன்மாதேவி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க, டிரைவர் பிரேக் போட்டார். இதில் ஆம்புலன்ஸ், சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாஸ்கரன் இறந்தார். டிரைவர் பக்ருதீன் மற்றும் பாஸ்கரன் மனைவி, உறவினர் காயமடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE