கடலுார்: பாரதிதாசன் இலக்கிய மன்றத்தின் சார்பில் பாரதியாரின் 139வது பிறந்த நாள் விழா கடலுாரில் நடந்தது.மன்றத் தலைவர் கடல் நாகராஜன் தலைமை தாங்கினார்.
புதுப்பாளையம் துர்கா தனிப்பயிற்சிக் கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் பாரதியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாணவ மாணவியர்கள் பாரதியார் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.கலைச்செல்வி மனோகரன், மாணவி சாய்தன்ய பாரதி ஆகியோர் பாரதியாரின் பாடல்களை பாடினர்.முன்னதாக மன்ற செயலாளர் வானவில்மூர்த்தி வரவேற்றார்,
திரைப்பட பாலாசிரியர் பூவை செங்குட்டுவன் பங்கேற்று பாரதி கவிதைகளின் பெருமைகளை பேசி, பாடல்கள் பாடிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.மன்ற பொருளாளர் பலராம் பாஸ்கரன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE