உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக திருநாவலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர்.அப்போது மணல் டிராக்டர் டிப்பரில் மணல் கடத்தி வந்த அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி மகன் பிரசாந்த், 23; என்பவரை கைது செய்து, டிராக்டர் மற்றும் டிப்பரை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE