சங்கராபுரம்: சங்கராபுரத்தில் வீட்டு மனைப்பட்டா கேட்டு இந்திய கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்கராபுரம் அடுத்த பூட்டை மற்றும் பாவளம் கிராமத்தில் பல ஆண்டுகளாக அரசு புறம் போக்கு இடத்தில் வீடு கட்டி குடியிருக்கும் மக்கள் வீட்டுமனைப் பட்டா கேட்டு வருவாய்த் துறைக்கு பல முறை விண்ணப்பித்தும் பட்டா வழங்கப்படவில்லை.இந்நிலையில் நேற்று இந்திய கம்யூ., கட்சி சார்பில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பூட்டை மற்றும் பாவளம் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடியிருப்போருக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE