செஞ்சி: மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.செஞ்சி அடுத்த ஏதாநெமிலியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சுரேஷ், 26; சென்னையில் டாக்சி டிரைவராக உள்ளார். இவரது மனைவி உமா மகேஸ்வரி, 24: திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.சென்னையில் போதிய வருமானம் இல்லாததால் ஏதாதெமிலியில் கோழிப் பண்ணை வைத்தார். அதிலும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், உமா மகேஸ்வரி துாக்கு போட்டு இறந்தார்.இதுகுறித்து அவரது தந்தை கன்னியப்பன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE